தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கேரளத்தில் விரைவு ரயில் மோதியதில் 4 தமிழர்கள் பலி

பாலக்காடு அருகே விரைவு ரயில் மோதியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

ஷோரனூர் ரயில் விபத்து.

Updated On :2 நவம்பர் 2024, 1:02 pm

DIN

பாலக்காடு அருகே விரைவு ரயில் மோதியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் பலியான நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு அருகே ஷோரணூரில் உள்ள பாரதப்புழா ஆற்றின் ரயில்வே மேம்பால தண்டவாளத்தை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் இன்று ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற விரைவு ரயில் மோதியதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 தொழிலாளர்கள் பலியானார்கள்.

பலியான தொழிலாளர்கள் சேலம் மாவட்டத்தைச் சேந்த வள்ளி, ராணி, லட்சுமணன் மற்றும் மேலும் ஒரு ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரது உடல் ஆற்றில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதனை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே ரயில் விபத்தில் பலியான 4 பேரும் ம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் ரயில் வருவதைக் கவனிக்காமல் இருந்திருக்கலாம். இதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து குறித்து மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன என்று ஷோரனூர் ரயில்வே காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.