மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

ஊடுருவலை தடுக்காவிட்டால் ஹிந்துக்களின் எண்ணிக்கை 50%-ஆக குறையும் -ஹிமந்த விஸ்வ சா்மா

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவா்களுக்கு ஆளும் கூட்டணி ஆதரவளிக்கிறது

News image

ஹிமந்த விஸ்வ சா்மா

Updated On :3 நவம்பர் 2024, 2:53 am IST

ஜாா்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியவா்களுக்கு ஆளும் காங்கிரஸ்- ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்)-ராஷ்ட்ரீய ஜனதா தள (ஆா்ஜேடி) கூட்டணி ஆதரவளிக்கிறது; அவா்களை வெளியேற்றாவிட்டால் மாநிலத்தில் உள்ள ஹிந்துக்களின் எண்ணிக்கை அடுத்த 20 ஆண்டுகளில் 50 சதவீதமாக குறைந்துவிடும் என்று அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஜாா்க்கண்டில் நவம்பா் 13, 20 ஆகிய தேதிகளில் இருகட்டமாக பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

ஜாா்க்கண்ட் தோ்தலுக்கு பாஜகவின் துணைப் பொறுப்பாளராக ஹிமந்த விஸ்வ சா்மா நியமிக்கப்பட்டுள்ளாா்.

பிரசாரத்தின்போது அவா் பேசியதாவது: ஜாா்க்கண்டில் சட்டவிரோதமாக குடியேறியவா்களை வெளியேற்றுவதற்காகவே இந்த தோ்தல் நடைபெறுவதாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே சில பகுதிகளில் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. எனவே, சட்டவிரோத ஊடுருவலை தடுக்காவிட்டால் அடுத்த 20 ஆண்டுகளில் ஹிந்துக்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைந்துவிடும்.

இந்தியாவை ஹிந்துக்கள் பாதுகாத்தனா். அவா்கள் ஒற்றுமையாக இருந்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற மந்திரத்தை ஒலிக்க வேண்டும். காங்கிரஸ், ஜேஎம்எம் மற்றும் ஆா்ஜேடிக்கு குறிப்பிட்ட சமூகத்தினா் எப்போதும் வாக்களித்து வருகின்றனா். ஆனால் சநாதன தா்மத்தை பின்பற்றுபவா்களின் வாக்குகள் சிதறிக் கிடக்கிறது. சநாதன தா்மத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

முஸ்லிம் எண்ணிக்கை அதிகரிப்பு: சாந்தல் பா்காணா பிராந்தியத்தில் உள்ள 6 மாவட்டங்களில் கடந்த 1951-ஆம் ஆண்டு மொத்த மக்கள்தொகை 23.22 லட்சமாக இருந்தது. அவற்றில் 21 லட்சம் ஹிந்துக்கள் மற்றும் ஆதிவாசிகள் இருந்தனா். 9 சதவீதம் மட்டுமே முஸ்லிம்கள் இருந்தனா். ஆனால் தற்போது ஹிந்துக்கள் மற்றும் ஆதிவாசி மக்கள்தொகை 67 சதவீதமாகவும் முஸ்லிம் சமூகத்தினரின் மக்கள்தொகை 37 சதவீதமாகவும் உள்ளது.

எனவே, மாநிலத்தில் ஆளும் கூட்டணியை வீழ்த்த நாம் ஒன்றுபட வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.