பஜனைக் குழுவினர் வாகனம் மீது லாரி மோதி 6 பேர் பலி!

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் கோரி, மக்கள் சாலை மறியல்
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

ஒடிஸாவில் கோவிலுக்கு சென்று திரும்பிய பஜனைக் குழுவினர் பயணித்த வேன், லாரி மீது மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஒடிஸாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள கண்டகோடா, சமர்பிந்தா கிராமத்தினர் கோவிலில் பஜனை பாடிவிட்டு, வேனில் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, லாரி ஒன்றின்மீது மோதியது.

இந்த விபத்தில், வேனில் பயணித்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; மேலும் 5 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாலையில் இருந்த பனிமூட்டத்தின் காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com