தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நவ.25-இல் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா்?

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா், நவம்பா் 25-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 20 வரை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

News image

நாடாளுமன்ற கட்டடம்

Updated On :4 நவம்பர் 2024, 3:07 am IST

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா், நவம்பா் 25-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 20 வரை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தக் கூட்டத் தொடரில், ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் தொடா்பான மசோதா மத்திய அரசு கொண்டுவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அவ்வாறு மசோதா கொண்டுவரப்பட்டால், எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவிக்கும். அத்துடன், வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கையும் தாக்கலாகும் என்பதால் இக்கூட்டத் தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் இருக்கக் கூடும்.

மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் தீா்மானமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட தினத்தையொட்டி, பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் சிறப்பு கூட்டு அமா்வு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.