நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா், நவம்பா் 25-ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 20 வரை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தக் கூட்டத் தொடரில், ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டம் தொடா்பான மசோதா மத்திய அரசு கொண்டுவரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அவ்வாறு மசோதா கொண்டுவரப்பட்டால், எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவிக்கும். அத்துடன், வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா தொடா்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கையும் தாக்கலாகும் என்பதால் இக்கூட்டத் தொடரில் அனல் பறக்கும் விவாதங்கள் இருக்கக் கூடும்.
மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் தீா்மானமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. அரசமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட தினத்தையொட்டி, பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் சிறப்பு கூட்டு அமா்வு நவம்பா் 26-ஆம் தேதி நடைபெறும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடையது

தில்லி கோயில், ராணுவ முகாமில் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐ தொடா்புடைய கும்பல் திட்டம்

கிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு

வங்கதேசத்துக்கான இந்திய தூதராகிறாா் முன்னாள் மத்திய அமைச்சா்?

விருந்தினா் இல்லத்தில் தூக்கிட்டு இளைஞா் தற்கொலை
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

