இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மகாராஷ்டிர காவல்துறை டிஜிபி ராஷ்மி சுக்லா இடமாற்றம்!

டிஜிபி ராஷ்மி சுக்லாவை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அதிரடி..

News image
டிஜிபி ராஷ்மி சுக்லா
Updated On :4 நவம்பர் 2024, 7:50 am

பிடிஐ

மகாராஷ்டிரத்தில் தேர்தல் நடக்கவுள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் டிஜிபி ராஷ்மி சுக்லாவை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் மகாராஷ்டிர தலைமைச் செயலாளருக்கு சுக்லாவின் பொறுப்பை அடுத்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

மேலும் டிஜிபியாக நியமனம் செய்ய மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை செவ்வாய்க்கிழமை பிற்பகலுக்குள் அனுப்புமாறு தலைமைச் செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் செல்போன்களை ஒட்டுக் கேட்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளில் புகார்களைத் தொடர்ந்து டிஜிபி ராஷ்மி சுக்லா அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளார்.

சமீபத்திய ஆய்வுக் கூட்டத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், அதிகாரிகள் பாரபட்சமற்றவர்களாகவும், நியாயமாகவும் நடந்துகொள்வது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது கட்சி சார்பற்றவர்களாக உணரப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று எச்சரித்தார்.

கடந்த அக்டோபர் 29 அன்று குமார், மகாராஷ்டிரத்தில் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட குற்றங்கள் குறித்து கவலை தெரிவித்ததோடு, இதுபோன்ற சம்பவங்களுக்கு கடுமையான தடையை உறுதி செய்யுமாறு டிஜிபி சுக்லாவிடம் கேட்டுக் கொண்டார்.

சமீபத்தில் என்சிபி தலைவர் பாபா சித்திக் கொல்லப்பட்டது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. அக்டோபர் 12 அன்று பாந்த்ரா கிழக்கில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மகாராஷ்டிர மாநிலத்தில் நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.