தில்லியில் உள்ள திபெத்திய சந்தை அருகே திங்கள்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த காவலர் மீது பேருந்து மோதிய விபத்தில் காவலர் உள்பட 2 பேர் பலியாகினர்.
வேகமாக வந்த தில்லி அரசு பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து காவலர், மற்றொரு நபரின் மீது மோதியுள்ளது. தில்லி போக்குவரத்துக் கழக ஊழியரைத் தவிர, அப்பேருந்தில் வேறுயாரும் பயணிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விக்டரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதையும் படிக்க: அமெரிக்காவில் இன்று அதிபா் தோ்தல்
இந்த சம்பவம் நேற்றிரவு 10.30 மணிக்கு நடந்ததாகக் கூறப்படுகிறது. காவலர் விக்டர் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, இந்த விபத்து நடந்துள்ளது.
பேருந்து ஓட்டுநர் வினோத் குமார் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ம.பி. படகு விபத்து; 9 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!

அரசுப் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு

அரசு மருத்துவமனைச் சுவர் இடிந்து விபத்து! 7 பேர் பலி! | Bengaluru

இந்தோனேசியாவில் ரயில் விபத்து! பலி எண்ணிக்கை 14-ஆக உயர்வு!
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


