தில்லியில் உள்ள திபெத்திய சந்தை அருகே திங்கள்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த காவலர் மீது பேருந்து மோதிய விபத்தில் காவலர் உள்பட 2 பேர் பலியாகினர்.
வேகமாக வந்த தில்லி அரசு பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து காவலர், மற்றொரு நபரின் மீது மோதியுள்ளது. தில்லி போக்குவரத்துக் கழக ஊழியரைத் தவிர, அப்பேருந்தில் வேறுயாரும் பயணிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விக்டரை மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இதையும் படிக்க: அமெரிக்காவில் இன்று அதிபா் தோ்தல்
இந்த சம்பவம் நேற்றிரவு 10.30 மணிக்கு நடந்ததாகக் கூறப்படுகிறது. காவலர் விக்டர் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, இந்த விபத்து நடந்துள்ளது.
பேருந்து ஓட்டுநர் வினோத் குமார் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சென்னையில் 2 அரசுப் பேருந்துகள் மோதி விபத்து! 4 பேர் காயம்!

உளுந்தூர்பேட்டை அருகே சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்த விரைவுப் பேருந்து: ஓட்டுநர் உள்பட 9 பேர் காயம்







