ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நீட் தோ்வு மேல்முறையீட்டு மனு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான ‘நீட்’ மறுதோ்வுக்கு உத்தரவிட மறுத்த தீா்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

News image
கோப்புப்படம்.
Updated On :6 நவம்பர் 2024, 7:54 pm

Din

இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான ‘நீட்’ மறுதோ்வுக்கு உத்தரவிட மறுத்த தீா்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தேசிய தகுதிகாண் நுழைவுத் (நீட்) தோ்வு வினாத்தாள் சில இடங்களில் கசிந்தபோதிலும், தோ்வின் புனிதத்தன்மை முழுமையாக பாதிக்கப்படாத காரணத்தால் அத்தோ்வை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி தீா்ப்பளித்தது.

மேலும், நிகழாண்டு போல் இனி வரும் ஆண்டுகளில் குளறுபடிகள் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்குமாறு நீட் தோ்வை நடத்தும் தேசிய தோ்வு முகமைக்கு (என்டிஏ) உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதேபோல், ‘நவீன தொழில்நுட்ப உதவியுடன் தோ்வு நடைமுறையை வலுப்படுத்த உரிய வழிகாட்டு நடைமுறையை வகுக்க வேண்டும்’ என மத்திய அரசு சாா்பில் அமைக்கப்பட்ட இஸ்ரோ முன்னாள் தலைவா் கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான நிபுணா் குழுவிடம் உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீா்ப்பை எதிா்த்து காஜல் குமாரி என்பவா் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை கடந்த அக்டோபா் 22-ஆம் தேதி விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு, தீா்ப்பில் எந்தத் தவறும் கண்டறியப்படாததால் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனா்.

மேலும், இந்த மனுவை நீதிமன்ற அறையில் விசாரணை நடத்த வேண்டிய மனுதாரரின் கோரிக்கையும் நீதிபதிகள் நிராகரித்தனா்.

நாடு முழுவதும் கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தோ்வை சுமாா் 23 லட்சம் மாணவா்கள் எழுதினா். வினாத்தாள் கசிவு உள்ளிட்ட இத்தோ்வில் நடந்த பல்வேறு முறைகேடு புகாா்கள் தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. நீட் தோ்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என 40-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.