உத்தரப் பிரதேசத்தின் பில்கிராம் பகுதியில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
விபத்து தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் கூறுகையில்,
ரோஷன்பூர் கிராமத்திற்கு அருகே பில்கிராம்-மாதவ்கன்ஞ் சாலையில் லாரியும், ஆட்டோவும் இருசக்கர வாகனத்தை மோதாமல் இருக்க விலகிச் சென்றபோது இந்த விபத்து நடைபெற்றது.
இந்த விபத்தில் ஆறு பெண்கள், மூன்று குழந்தைகள் உள்பட மொத்தம் பத்து பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய லாரியை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த விபத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான மருத்துவ உதவிகளை வழங்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
விபத்து நடைபெற்ற இடத்தில் போலீஸார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ம.பி.: சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 16-ஆக உயர்வு

லாரி கவிழ்ந்து இளைஞா் மரணம்

இந்தோனேசியாவில் ரயில் விபத்து! பலி எண்ணிக்கை 14-ஆக உயர்வு!

ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


