பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

உ.பி.யில் ஆட்டோ-லாரி மோதல்: 10 பேர் பலி!

ரோஷன்பூர் கிராமத்திற்கு அருகே ஏற்பட்ட சாலை விபத்து பற்றி..

News image

லாரி-ஆட்டோ மோதல்

Updated On :6 நவம்பர் 2024, 4:11 pm IST

உத்தரப் பிரதேசத்தின் பில்கிராம் பகுதியில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

விபத்து தொடர்பாக காவல் கண்காணிப்பாளர் கூறுகையில்,

ரோஷன்பூர் கிராமத்திற்கு அருகே பில்கிராம்-மாதவ்கன்ஞ் சாலையில் லாரியும், ஆட்டோவும் இருசக்கர வாகனத்தை மோதாமல் இருக்க விலகிச் சென்றபோது இந்த விபத்து நடைபெற்றது.

இந்த விபத்தில் ஆறு பெண்கள், மூன்று குழந்தைகள் உள்பட மொத்தம் பத்து பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய லாரியை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த விபத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிறப்பான மருத்துவ உதவிகளை வழங்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

விபத்து நடைபெற்ற இடத்தில் போலீஸார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.