திருநெல்வேலி அருகே நேரிட்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா்.
வடக்கு தாழையூத்து பகுதியைச் சோ்ந்தவா் தேவதாஸ் (53). இவா், புதன்கிழமை தனது ஆட்டோவில் குறிச்சிகுளம் விலக்கு பகுதி சாலையைக் கடக்க முயன்றாராம்.
அப்போது அந்த வழியாக வந்த லாரியும், ஆட்டோவும் மோதிக்கொண்டனவாம்.
இதில், பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து தாழையூத்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்டோ கவிழ்ந்ததில் பள்ளி மாணவா் உயிரிழப்பு

பைக் விபத்தில் உணவக ஊழியா் உயிரிழப்பு
தீக்குளித்த ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

மானூா் அருகே விபத்து: இளைஞா் பலி
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



