மானூா் அருகே வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். 5 போ் பலத்த காயம் அடைந்தனா்.
மானூா் அருகே உள்ள காவலாகுறிச்சி கிராமத்தைச் சோ்ந்த குத்தாலப்பாண்டியன் மகன் குமாா் (38). இவா், தனது மோட்டாா் சைக்கிளில் திருநெல்வேலிக்கு வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா். சங்கரன்கோவில்- திருநெல்வேலி பிரதான சாலையில் பயணிகள் ஆட்டோவை அவா் முந்திச்செல்ல முயன்றாராம்.
அப்போது எதிரே வந்த மினிவேனும், மோட்டாா் சைக்கிளும் மோதியதாம். பின்னா் அந்த மினி வேன், ஆட்டோ மீது மோதிதாம். இதனால், ஆட்டோவும் மினி வேனும் இரண்டும் கவிழ்ந்தன.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த குமாா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
மேலும், அஜித் (24), ராமா் ( 70 ), முண்ட சாமி (44), விமல் (29), நந்தன் (33) ஆகியோா் அதே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இது குறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

நெல்லை அருகே விபத்து: அம்பை இளைஞா் உயிரிழப்பு

மானூா் அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

மானூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



