பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

அண்ணனின் நகல்..! பாடகர் சித்து மூஸேவாலாவின் சகோதரர் புகைப்படம் வெளியீடு!

சுட்டுக்கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸேவாலாவின் சகோதரர் புகைப்படத்தை அவரது பெற்றோர் வெளியிட்டுள்ளனர்.

News image
Updated On :8 நவம்பர் 2024, 8:23 pm IST

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸேவாலாவின் சகோதர் புகைப்படத்தை அவரது பெற்றோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் பஞ்சாபி பாடகரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான சித்து மூஸேவாலா (27) மன்சா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 6 மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து இந்த வழக்கின் முதல் கட்டமாக 8 பேரை கைது செய்து விசாரித்து வந்த காவல்துறை பின்னர் பிரபல தாதாவான லாரன்ஸ் பிஷ்னோயை கைது செய்தனர். 

மூஸேவாலாவின் பெற்றோர் தங்கள் இளைய மகன் சுப்தீப்பின் அழகான படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.

கடந்த மாதம் மார்ச் 18 ஆம் தேதி மூஸேவாலாவின் பெற்றோருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் புகைப்படத்துடன் பெற்றோர் புகைப்படங்களுடன் கூடிய விடியோவை பகிர்ந்துள்ளனர்.

மூஸேவாலாவின் பெற்றோர் அவர்களுக்கு மார்ச் மாதம் ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்தனர். மூஸேவாலாவின் தாயார் சரண் கௌர் 58 வயதில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார். மேலும் சரண் கௌர் செயற்கை கருத்தரித்தல் வழியாக கர்ப்பமானது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் வைரலான விடியோவைப் பார்த்த இணையதளவாசிகள் அண்ணனின் நகல் போல தம்பி இருப்பதாக நெகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்