இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்(ஐஓசிஎல்) சுத்திகரிப்பு ஆலையில் திங்கள்கிழமை(நவ. 11) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
குஜராத் மாநிலம் வதோதரா நகரில் அமைந்துள்ள சுத்திகரிப்பு ஆலையில் திங்கள்கிழமை மாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஆலையில் உள்ள பென்ஸீன் சேமிப்பு தொட்டி வெடித்துச் சிதறியதே, தீ விபத்துக்கான காரணமாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மளமளவென பரவிய தீ அருகிலிருந்த பிற பகுதிகளிலும் பற்றிக் கொண்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நெடுநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இன்று(நவ. 12) அதிகாலை வரை தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்ததை காண முடிந்தது.
இந்த நிலையில், தீ விபத்தில் சிக்கி ஆலையில் இருந்த இரு பணியாளர்கள் உயிரிழந்தனர். இந்தியன் ஆயில் அதிகாரியொருவர் தீக்காயங்களுடன் மீட்கபட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் திட்டம்: என்எல்சி, இந்தியன் ஆயில் நிறுவனங்கள் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழகத்தில் பசுமை எரிசக்தி திட்டங்கள்: என்எல்சி இந்தியா - இந்தியன் ஆயில் ஒப்பந்தம்
புதுக்கோட்டை அருகே வங்கியில் தீ விபத்து

பிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



