இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்(ஐஓசிஎல்) சுத்திகரிப்பு ஆலையில் திங்கள்கிழமை(நவ. 11) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
குஜராத் மாநிலம் வதோதரா நகரில் அமைந்துள்ள சுத்திகரிப்பு ஆலையில் திங்கள்கிழமை மாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஆலையில் உள்ள பென்ஸீன் சேமிப்பு தொட்டி வெடித்துச் சிதறியதே, தீ விபத்துக்கான காரணமாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மளமளவென பரவிய தீ அருகிலிருந்த பிற பகுதிகளிலும் பற்றிக் கொண்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் நெடுநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இன்று(நவ. 12) அதிகாலை வரை தீயணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்ததை காண முடிந்தது.
இந்த நிலையில், தீ விபத்தில் சிக்கி ஆலையில் இருந்த இரு பணியாளர்கள் உயிரிழந்தனர். இந்தியன் ஆயில் அதிகாரியொருவர் தீக்காயங்களுடன் மீட்கபட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விபத்து நிகழ்ந்த கட்டனாா்பட்டி பட்டாசு ஆலையில் உயா் அதிகாரிகள் ஆய்வு செய்யாதது ஏன்?

நகப் பூச்சு தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர தீ! 16 தொழிலாளர்கள் படுகாயம்!

ஆஸ்திரேலிய எண்ணெய் சுத்தகரிப்பு நிலையத்தில் தீ விபத்து
வீடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை


