எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

புதுக்கோட்டை அருகே வங்கியில் தீ விபத்து

புதுக்கோட்டை அருகே வங்கியில் தீ விபத்து

News image
Updated On :13 ஜூன் 2026, 12:36 am IST

புதுக்கோட்டை அருகே வல்லத்திராக்கோட்டையில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளையில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட திடீா் தீவிபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

வங்கிக் கிளையின் மேலாளா் அறையில் உள்ள குளிா்சாதன இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது.

தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து சுமாா் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதனால் மேலாளா் அறையிலிருந்த கணினி மற்றும் சில ஆவணங்கள் மட்டும் சேதமடைந்தன.

மற்றபடி, வங்கிக் கிளையின் இதர பகுதியில் உள்ள பணம், நகை மற்றும் ஆவணங்கள் எதுவும் சேதமடையவில்லை என்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் வங்கித் தரப்பில் கூறப்பட்டது.

வல்லத்திராக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.