கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

நாடு தழுவிய கடலோர கண்காணிப்பு பயிற்சி: நவ.20-இல் தொடக்கம்

இந்திய கடற்படையின் தலைமையில், "கடலோர கண்காணிப்பு-24' (சீ விஜில்}24) பயிற்சி நவ. 20, 21 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் நடத்தப்படுகிறது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 10:10 pm

DIN

நமது சிறப்பு நிருபர்

இந்திய கடற்படையின் தலைமையில், "கடலோர கண்காணிப்பு-24' (சீ விஜில்}24) பயிற்சி நவ. 20, 21 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் நடத்தப்படுவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

2008}இல் மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தப் பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டின் சுமார் 11,098 கி.மீ. கடற்கரையும், 24 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பிரத்யேக பொருளாதார மண்டல

மும் கடலோரப் பகுதியில் உள்ளன.

இவற்றை உள்ளடக்கிய இந்த விரிவான பயிற்சி, மீனவ சமுதாயத்தினர் கடலோர மக்கள், பல்வேறு கடலோரப் பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட அனைத்து கடல்சார் பங்குதாரர்களையும் ஒரே நேரத்தில் ஈடுபடுத்தி அவர்களுக்கு கடல் வழியாக வரும் ஆபத்துகளை எதிர்கொள்வதற்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.

இந்த நடவடிக்கைகளை மேம்படுத்தக் கூடிய வகையில் இந்த "சீ விஜில்' பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய இந்தப் பயிற்சி முன்னெப்போதும் இல்லாத அளவில் விரிவாக்கப்பட்டுள்ளது.

தேசியப் பாதுகாப்பு குழும செயலக அதிகாரிகள், மாநில கடல்பகுதி காவல் துறை, கடலோரக் காவல்படை, சுங்கத் துறை, மீன்வளத் துறை உள்ளிட்ட ஆறு மத்திய அமைச்சகங்கள், 21 அமைப்புகள் மற்றும் முகமைகள் பங்கேற்புடன் நவ. 20, 21}ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது.

அனைத்து கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் (லட்சத்தீவு, அந்தமான் தீவு) கடற்படைத் தலைமை அதிகாரிகளைக் கொண்ட இந்திய கடற்படையின் சிடிஎஸ்ஆர்இ (கடலோரப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தயார்நிலை மதிப்பீடு கட்டப் பயிற்சி) குழுவின் தலைமையில் இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது.

நிகழாண்டில் பிற ராணுவ சேவைகளும் (இந்திய தரைப்படை, விமானப்படை) பங்கேற்பதோடு, அதிக எண்ணிக்கையிலான கப்பல்கள், விமானங்கள் நிறுத்தப்பட்டு பயிற்சியின் வேகம் மேம்படுத்தப்படவுள்ளது என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.