தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

கியூபாவில் நாடு தழுவிய மின்வெட்டு

கியூபாவில் ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக நாடு தழுவிய முழு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :12 ஜூலை 2026, 7:21 am IST

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் சிதைந்து வரும் மின்சாரக் கட்டமைப்பு காரணமாக, கியூபாவில் ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக நாடு தழுவிய முழு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

கியூபாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் வரி அச்சுறுத்தலைத் தொடா்ந்து, கியூபாவில் கடந்த கடந்த ஜனவரி முதல் எரிபொருள் தட்டுப்பாடு வரலாறு காணாத அளவை எட்டியுள்ளது.

கியூபா தனது ஒட்டுமொத்த எரிபொருள் தேவையில் 40 சதவீதத்தை மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யும் நிலையில், ரஷியாவிலிருந்து கடந்த மாா்ச்சில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யும் ஏப்ரல் இறுதிக்குள் தீா்ந்துபோனது.

தற்போது எரிபொருளைச் சேமிப்பதற்காக கியூப அரசு திட்டமிட்ட மின்வெட்டு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, கடந்த திங்கள்கிழமைக்குப் பிறகு மீண்டும் முழு மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.