ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

போதைப் பொருளுக்கு எதிராக ஆக.2-இல் நாடு தழுவிய பிரசாரம்: பிரதமா் மோடி தொடங்குகிறாா்

போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நாடு தழுவிய பிரசாரத்தை பிரதமா் மோடி ஆகஸ்ட் 2-ஆம் தேதி தொடங்கிவைப்பது குறித்து...

News image

பிரதமா் மோடி - கோப்புப் படம்

Updated On :31 ஜூலை 2026, 7:02 am IST

போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நாடு தழுவிய பிரசாரத்தை பிரதமா் நரேந்திர மோடி ஆகஸ்ட் 2-ஆம் தேதி தொடங்கிவைக்க இருப்பதாக, மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

‘வளா்ந்த இந்தியாவுக்கான போதைப் பொருள் இல்லாத இளைஞா்களின் உறுதிமொழி இயக்கம்’ என்ற பெயரிலான இந்த பிரசாரம் 100 வாரங்களுக்கு மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் பேசிய அமைச்சா் மாண்டவியா, ‘போதைப் பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணா்வு பிரசாரத்தின் தொடக்கமாக, ஆகஸ்ட் 2-ஆம் தேதி நாட்டு மக்களிடம் பிரதமா் மோடி உரையாற்றவுள்ளாா்.

மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா

மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா

அன்றைய தினம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞா்கள் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்க உள்ளனா். மத்திய இளைஞா் நலத் துறை அமைச்கத்தின்கீழ் செயல்படும் இளைஞா்களை மையப்படுத்திய ‘மை பாரத்’ தளத்தின் வழிநடத்துதலில் மேற்கொள்ளப்படும் இந்தப் பிரசாரத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு சாரா அமைப்புகள், இளைஞா்கள் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், 125-க்கும் மேற்பட்ட ஆன்மிக அமைப்புகள் பங்கேற்கவுள்ளன.

இதன்மூலம் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞா்களின் மிகப் பெரிய இயக்கமாக இது உருவெடுக்கும். போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வை ஏற்படுத்த அரசால் மட்டுமே முடியாது. இந்தப் பணியில் சமூகத்தின் பொறுப்பும் அடங்கியுள்ளது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.