மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

வரலாறு படைக்கப்பட்டது... விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புகழாரம்!

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் பதிவு குறித்து...

News image

அனாஹத் சிங், அமைச்சர் மன்சுக் மாண்டவியா - படங்கள்: எக்ஸ் / சாய் மீடியா, மன்சுக் மாண்டவியா.

Updated On :26 ஜூலை 2026, 1:08 pm IST

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது எக்ஸ் பக்கத்தில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் வென்று வரலாறு படைத்த அனாஹத் சிங்கிற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் முதல்முறையாக கோப்பை வென்ற இந்தியராக அனாஹத் சிங் வரலாறு படைத்துள்ளார்.

கனடாவின் ஒன்டாரியோ நகரில் நடைபெற்ற மகளிர் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பிரிவில் பலம்வாய்ந்த எகிப்து வீராங்கனையை இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 3-0 கேம்களில் வென்று அசத்தினார்.

இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக இந்தப் பிரிவில் சமபியன் பட்டம் வென்ற அசத்தியுள்ள அனாஹத் சிங்கிற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்தியாவின் விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

வரலாறு படைக்கப்பட்டது! அனாஹத் சிங்கிற்கு வாழ்த்துகள். உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் முதல் இந்தியராக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அற்புதமான சாதனை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம் எனக் கூறியுள்ளார்.

Summary

History Made Mansukh L. Mandaviya praised anahat singh achievement

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.