
கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
வயநாட்டில் 64.53 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் வெளியிட்டப்பட்டுள்ள முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று 9.45 லட்சம் வாக்காளா்கள் வாக்குப்பதிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PTI
வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி போட்டியிட்டுள்ளார்.
தோ்தலில் முதன்முறையாக களமிறங்கியிருக்கும் பிரியங்கா காந்தி வயநாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவொன்றில், “தங்களுடைய அன்பை எனக்களித்த, என்னை பரந்து விரிந்த கைகளால் வரவேற்ற வயநாட்டு மக்களுக்கு உங்களுடைய ஜனநாயக உரிமையை வெளிப்படுத்தியதற்காக மிகப்பெரியதொரு நன்றி!
நமது தேசம் கட்டமைக்கப்பட்டுள்ள கொள்கைகளுக்காக நான் தொடர்ந்து போராடுவதற்கும், நான் மேலும் கடினமாக உழைப்பதற்கும் நீங்கள் உத்வேகமாக இருக்கிறீர்கள்.
வயநாட்டிலுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒவ்வொரு தொண்டருக்கும், தலைவருக்கும், இந்த பிரசாரத்துக்காக எனக்கு உங்களின் ஆதரவைத் தர, கேரளம் முழுவதுமிலிருந்தும் நாடு முழுவதுமிலிருந்தும் பிற மாநிலங்களிலிருந்து வருகை தந்திருந்த பெரும்பாலான உங்களுக்கும், நம் கொள்கைகளுக்காக நீங்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும், உங்களின் அன்புக்கும், ஒப்பில்லா ஈடுபாட்டுக்கும் நான் மிகுந்த நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








