
உத்தரப் பிரதேசத்தின் பிலிபிட்டில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பரேலி மாவட்டத்தில் உள்ள நவாப்கஞ்ச் மற்றும் அருகிலுள்ள கிராமங்களிலிருந்து பிகாரில் உள்ள ஒரு சூளைக்கு சுமார் 60 தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பல்ராம்பூர் சௌக்கில் சாலையில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 25 பேர் காயமடைந்தனர். மேலும் ருக்சானா மற்றும் ஜன்னதி பேகம் ஆகிய இரு பெண்கள் படுகாயமடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மீதமுள்ளவர்கள் பூரான்பூரில் உள்ள சமூக நல மையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பாக போலீஸார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.