அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

எட்டாம் வகுப்பில் ஃபெயில்... அறுவை சிகிச்சை நிபுணராக வலம்வந்த போலி மருத்துவர்!

போலி அறுவை சிகிச்சை மருத்துவர் பிடிபட்டது பற்றி...

News image
கைது செய்யப்பட்ட உத்பால் பாலா.- Express
Updated On :15 நவம்பர் 2024, 8:01 am

DIN

எட்டாம் வகுப்பில் தோல்வியடைந்தவர் போலி அறுவை சிகிச்சை நிபுணராக வலம்வந்த நிலையில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒடிஸா மாநிலம் பெர்ஹம்பூர் மாவட்டத்தில் கிருஷ்ணா மூல(பைல்ஸ்) மருத்துவமனையை நடத்தி வருபவர் உத்பால் பாலா. இவரிடம் மூல நோய்க்காக சமீபத்தில் சிகிச்சைப் பெற்ற ஜாஷ்யா என்பவர் ரூ. 12,000 கட்டணமாக கொடுத்துள்ளார்.

ஆனால், நோய் சரியாகாததால், தான் கொடுத்த தொகையை திரும்பக் கேட்டு உத்பால் பாலாவை நாடியுள்ளார். அதன்பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜாஷ்யா, காவல்துறையில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, உத்பாலின் மருத்துவமனையில் வியாழக்கிழமை திடீர் சோதனையில் காவல்துறையினரும் சுகாதாரத் துறையினரும் ஈடுபட்டனர்.

இதில், உத்பால் பாலா போலி மருத்துவர் என்பது தெரியவந்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு அவர் வைத்திருந்த மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உத்பால் பாலாவின் பின்னணி

மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள தின்னா நேதாஜிபள்ளியை சேர்ந்த உத்பால் பாலா, எட்டாம் வகுப்பில் தோல்வி அடைந்துள்ளார்.

அதன்பிறகு, பள்ளிப் படிப்பை தொடராத உத்பால், விசாகப்பட்டினத்தில் 2016 முதல் 2019 வரை ஹோட்டலில் பணிபுரிந்துள்ளார். தொடர்ந்து, பெர்ஹம்பூருக்கு வந்தவர், மித்ரா வீதியில் வாடகை வீடு எடுத்து தங்கி கிளினிக் ஒன்றையும் தொடங்கியுள்ளார்.

மூலம், பாலியல் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்து வந்த உத்பால், தனது பெயர்ப் பலகையில் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளநிலைப் பட்டத்தை குறிப்பிட்டிருந்தார்.

மேலும், மூல நோய் தொடர்பான அறுவை சிகிச்சைகளும் சில நோயாளிகளுக்கு உத்பால் செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவண விவேக் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.