மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தீவைக்கும் முன் கொடூரமாக துன்புறுத்தப்பட்ட மணிப்பூர் பெண்: உடல் கூறாய்வு அறிக்கை

தீவைக்கும் முன் மணிப்பூர் பெண் கொடூரமாக துன்புறுத்தப்பட்டதாக உடல் கூறாய்வு அறிக்கை தகவல்

News image
கோப்புப் படம்
Updated On :15 நவம்பர் 2024, 7:10 am

DIN

மணிப்பூரில், கடந்த வாரம், மூன்று குழந்தைகளுக்கு தாயான 31 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிருடன் தீ வைத்து எரிக்கப்படுவதற்கு முன்பு, கொடூரமாக துன்புறுத்தப்பட்டிருப்பதாக உடல் கூறாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

மணிப்பூர் மாநிலம் ஜிரிபம் பகுதியில் நவம்பர் 7ஆம் தேதி நுழைந்து சமூக விரோதிகள் சிலர், ஒரு வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த பெண்ணை தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்து, துன்புறுத்தி, உடலில் தீ வைத்து எரித்துள்ளனர்.

மணிப்பூரில் வன்முறை நடந்து வரும் நிலையில் தீக்கிரையான பெண்ணின் உடல், அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் மருத்துவக் கல்லூரியில் உடல் கூறாய்வு செய்யப்பட்டது. பெண்ணின் உடல் முழுவதும் எரிந்து கரிக்கட்டையானதால், பாலியல் வன்கொடுமை குறித்து உறுதி செய்ய இயலாமல் போனதாகக் கூறப்படுகிறது. மணிப்பூர் பெண்ணின் உடல் 99 சதவீதம் எரிந்துவிட்டிருந்ததாகவும், அவரது எலும்புகள் கூட கரிக்கட்டையாகியிருந்ததாக உடல்கூறாய்வு தெரிவிப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பெண்ணின் உடலில் கடுமையான காயங்கள் இருந்துள்ளதும், முகத்தின் அமைப்பே சிதைந்து, கை மூட்டுகள் சிதைந்துபோயிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், அந்த உடல் கூறாய்வு அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள், கொல்லப்படுவதற்கு முன்பு, அப்பெண் அனுபவித்த கொடூரமான துன்புறுத்தல்களையும் வலியையும் உணர்த்துவதாக உள்ளது.

இதுவரை கொலையாளிகள் அடையாளம் காணப்படவில்லை. சம்பவத்தின்போது, கணவரும், அவரது பிள்ளைகளும் எங்கிருந்தார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வன்முறையின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையின் உச்சக்கட்டமாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பும் ஏராளமான பெண்கள் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்பட்டிருந்தாலும், இந்த சம்பவம் கேட்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.