இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சத்தீஸ்கரில் 5 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கரில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சல்கள் கொல்லப்பட்டு, பாதுகாப்புப் படையினர் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

News image
நக்சல்கள் சுட்டுக் கொலை (கோப்புப் படம்)
Updated On :16 நவம்பர் 2024, 10:37 am

DIN

சத்தீஸ்கர் மாநிலத்தின் நாரயண்பூர், கான்கெர் மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சல்கள் கொல்லப்பட்டு, பாதுகாப்புப் படையினர் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

சத்தீஸ்கரில் வடக்கு அபுஜ்மத் பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்குக் கிடைத்தத் தகவலின் பேரில் மாவட்ட ரிசர் காவல் படை, சிறப்பு அதிரடிப் படை, எல்லைப் பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியில் கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

நாரயண்பூர், கான்கெர் மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் இன்று காலை 8 மணி அளவில் பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தபோது, மறைவான பகுதியிலிருந்து நக்சல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பதுங்கியிருந்த அவர்களிடமிருந்து வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அங்கிருக்கும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடுதல் வேட்டையை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் இந்த ஆண்டில் மட்டும் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 197 நக்சல்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நக்சல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களில் கான்கெர் மற்றும் நாரயண்பூர் மாவட்டங்களும் அடங்கியுள்ளன. இங்கு, பாதுகாப்புப் படையினர் தொடர்ச்சியாக தீவிர நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.