சத்தீஸ்கர் மாநிலத்தின் நாரயண்பூர், கான்கெர் மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சல்கள் கொல்லப்பட்டு, பாதுகாப்புப் படையினர் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
சத்தீஸ்கரில் வடக்கு அபுஜ்மத் பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்குக் கிடைத்தத் தகவலின் பேரில் மாவட்ட ரிசர் காவல் படை, சிறப்பு அதிரடிப் படை, எல்லைப் பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியில் கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
நாரயண்பூர், கான்கெர் மாவட்டங்களின் எல்லைப்பகுதியில் இன்று காலை 8 மணி அளவில் பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டிருந்தபோது, மறைவான பகுதியிலிருந்து நக்சல்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க | மணிப்பூர்: 3 பெண்களின் உடல்கள் மீட்பு!
பதுங்கியிருந்த அவர்களிடமிருந்து வெடிமருந்து மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அங்கிருக்கும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடுதல் வேட்டையை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் இந்த ஆண்டில் மட்டும் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 197 நக்சல்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நக்சல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட 7 மாவட்டங்களில் கான்கெர் மற்றும் நாரயண்பூர் மாவட்டங்களும் அடங்கியுள்ளன. இங்கு, பாதுகாப்புப் படையினர் தொடர்ச்சியாக தீவிர நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜார்க்கண்டில் ரயிலில் கடத்தப்பட்ட 174 திருட்டு மொபைல்கள் பறிமுதல்: 2 பேர் கைது!

உடற்பயிற்சியாளர் சுட்டுக் கொலை! தொடரும் என பிஷ்னோய் கும்பல் எச்சரிக்கை
உ.பி.யில் 11-ஆம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!

மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



