பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

உ.பி.யில் 11-ஆம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை!

குற்றஞ்சாட்டப்பட்ட நபர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை...

News image

என்கவுன்ட்டர் நடைபெற்ற இடத்தில் காவல் துறை அதிகாரிகள் ஆய்வு - @ghaziabadpolice

Updated On :31 மே 2026, 11:19 am IST

லக்னௌ : உத்தரப் பிரதேசத்தில் 11-ஆம் வகுப்பு மாணவன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி ஒருவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது உத்தரப் பிரதேசத்தில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் காஸியாபாத் அருகே கோதா பகுதியில் கடந்த மே 28-ஆம் தேதி சூர்ய பிரதாப் சௌஹான் என்ற 17 வயது சிறுவனுக்கும் அவரது நண்பர்கள் குழுவுக்கும் இடையே மோட்டார் சைக்கில் ஓட்டுவதில் ஏற்பட்ட தகராறு மோதலில் முடிந்தது. சண்டை முற்றியதில் சௌஹானை அவரது நண்பர்கள் குழு கத்தியால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மே 29-இல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து, கொலை வழக்குப் பதிந்து காவல் துறை நடத்திய விசாரணையில் இந்தக் கொலையில் 5 நபர்களுக்கு தொடர்பிருப்பதை உறுதி செய்தனர். அவர்களில் மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட ஆஸாத் என்ற நபர் தலைமறைவானார். அவரைப் பற்றிய துப்பு அளித்தால் ரூ. 50,000 வெகுமதி அறிவிக்கப்பட்டு அவர் தேடப்பட்டு வந்தார்.

இந்த நிலையில், அந்த நபர் மறைந்திருந்த இடம் போலீஸாருக்கு தெரிய வரவே, சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறை அதிகாரிகள் ஆஸாத்தைப் பிடிக்க முயன்றபோது அவர்களை நோக்கி தன்னிடமிருந்த துப்பாக்கியால் ஆஸாத் சுட்டதாக கூறப்படுகிறது. பதிலுக்கு போலீஸாரும் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் ஆஸாத் தப்பியோட முயன்றாராம்.

அப்போது காவல் துறையினர் அவரைச் சுட்டுப் பிடித்தனர். அதில் பலத்த காயமடைந்த ஆஸாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

Summary

Ghaziabad: Main accused in the murder of UP student Surya Chauhan killed in a police encounter

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.