உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு நாள்களில் தொடா் விசாரணை வழக்குகள் விசாரிக்கப்படாது என்ற புதிய நடைமுறை சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பொறுப்பேற்ற சில நாள்களில் இதுகுறித்த சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.
அதன்படி, உச்சநீதிமன்றத்தில் இனி புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு நாள்களில் புதிய மனுக்கள், பிணை மனுக்கள் மட்டுமே விசாரணைக்காக பட்டியலிடப்படும். தொடா் விசாரணை வழக்குகளின் விசாரணை இந்த இரு நாள்களில் நடைபெறாது.
செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரையிலான 3 நாள்களில் ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட வழக்குகள் உணவு இடைவேளைக்குப் பிந்தைய பிற்பகல் அமா்வில் பதிவாளா் அலுவலத்தின் அனுமதியுடன் பட்டியலிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நடைமுறையின்படி, புதிய வழக்குகளின் விசாரணைகள் திங்கள்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பட்டியிலிடப்பட்டன. செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரையில் தொடா் விசாரணை வழக்கின் விசாரணைகள் நடைபெற்று வந்தன.
தொடர்புடையது

நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம்

ஹோா்முஸ் நீரிணையை கடந்த இரு கப்பல்கள்: இந்தியாவுக்கு மேலும் 92,000 டன் எல்பிஜி!

இரு நாள்களில் ரூ.57.55 லட்சம், 12.85 கிலோ வெள்ளி பறிமுதல்

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு பிணை: உச்சநீதிமன்றம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


