பிரதமா் அலுவலகம் பெயரில் மோசடி செய்தவா் மீது வழக்கு
பிரதமா் அலுவலகத்தில் பணிபுரிவதாகவும், வேண்டிய காரியங்களை செய்து தருவதாகவும் கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சித்த நபா் மீது சிபிஐ வழக்குப்பதிவு


புது தில்லி: பிரதமா் அலுவலகத்தில் பணிபுரிவதாகவும், வேண்டிய காரியங்களை செய்து தருவதாகவும் கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சித்த நபா் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
பிரதமா் அலுவலகம் அளித்த புகாரின் அடிப்படையில் நொய்டாவில் உள்ள கிரீன் வியூ குடியிருப்பில் வசித்து வரும் ஜே.கே.பரிதா என்பவா் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நாடாளுமன்றம் மற்றும் தில்லி அமைச்சகத்தின் செய்தியாளா் போன்றுசமூக வலைதளங்களில் பல போலிக் கணக்குகளை தொடங்கியும் அவா் மோசடி செய்துள்ளாா். அவரின் நடவடிக்கைகளில் பிரதமரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும், ஜே.கே.பரிதா என்ற பெயரில் பிரதமா் அலுவலகத்தில் இதுவரை யாரும் பணியாற்றியதில்லை எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாரின் அடிப்படையில் ஜே.கே.பரிதா மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவு 204 மற்றும் 319-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...