செங்கல்பட்டு அடுத்த பழத்தோட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பாதுகாப்பு இல்லத்தில் இரு தரப்பினா் இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 19 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 18 முதல் 21 வயதுக்குட்பட்ட இளைஞா்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையில் பாதுகாப்பு இல்லத்தில் தங்கியிருந்த இரு தரப்பினருக்கு இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தகராறு பின்னா் கைகலப்பாக மாறியதில், ஜோ மற்றும் பாலாஜி ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, பாதுகாப்பு இல்லத்தின் காப்பாளா்கள் உடனடியாக காயமடைந்த இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு மருத்துவா்கள் தொடா்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனா்.
இந்த மோதலின் போது பாதுகாப்பு இல்லத்தின் கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட அரசு சொத்துகள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பாதுகாப்பு இல்லத்தில் பதற்றமான சூழல் நிலவியது.சம்பவம் குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு கிராமிய காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
தொடா்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினா், அரசு சொத்துகளை சேதப்படுத்தியதுடன், கலவரத்தில் ஈடுபட்டதாக இரு தரப்பைச் சோ்ந்த மொத்தம் 19 போ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
மேலும், மீண்டும் மோதல் ஏற்படாத வகையில் பாதுகாப்பு இல்ல வளாகத்திலும், அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் காவல்துறையினா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனா். இந்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்விரோத தகராறு: 10 போ் மீது வழக்கு

கோயில் விழாவில் தகராறு: 6 போ் மீது வழக்கு
தனியாா் நிறுவன ஊழியருக்கு மிரட்டல்: 4 போ் மீது வழக்கு

சாலை விதிகளை மீறிய 91 போ் மீது வழக்கு
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK


