ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

வட இந்தியாவை சூழ்ந்திருக்கும் காற்றுமாசு! விண்வெளியிலிருந்தும் தெரிகிறதாம்!!

வட இந்தியாவை சூழ்ந்திருக்கும் காற்றுமாசுவை, விண்வெளியிலிருந்தும் பார்க்க முடிகிறதாம்.

News image

காற்று மாசு

Updated On :19 நவம்பர் 2024, 11:52 am IST

காற்று மாசு எனும் மிகப்பெரிய பேரிடரால், தலைநகர் தில்லி மற்றும் அதன் அண்டை மாநிலங்கள் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் நிலையில், விண்வெளியிலிருந்தும், இந்த காற்று மாசு தெரிகிறது என்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

தலைநகர் உள்பட வட இந்தியாவின் ஒரு பெரிய பகுதி முழுவதும் கடுமையான காற்று மாசுபாட்டால் சூழப்பட்டுள்ளது, ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக்கொண்டே இருக்கும் இந்த அபாயகரமான காற்று மாசுபாட்டுக்கு லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காற்று மாசுபாட்டுடன் புகைமூட்டம் பார்க்கும் திறனை வெகுவாகக் குறைத்து, மாசுபட்டக் காற்றை சுவாசிப்பதால் உடல்நிலை மோசமடைந்து, மக்கள் சுவாசிக்கக் கூட முடியாமல் சிரமப்படுகின்றனர்.

தலைநகர் தில்லி, குருகிராம், நொய்டா மற்றும் காசியாபாத் போன்ற முக்கிய நகரங்களில் காற்றுத் தரக் குறியீடு (ஏக்யூஐ) அளவுகள் "கடுமையான" பிரிவில் இருக்கின்றன. இது உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த பாதுகாப்பான வரம்புகளை விட மிக மிக அதிகம்.

கடந்த மாதம்

கடந்த மாதம்

வட இந்தியாவை சூழ்ந்திருக்கும் காற்று மாசுவினை, வெறும் வீட்டின் மொட்டை மாடியிலிருந்து மட்டுமல்ல, விண்வெளியிலிருந்து பார்த்தாலும் தெரிகிறது என்பதுதான் சோகம். கடந்த மாதம் இதே காலத்தை விட, இந்த மாதம், வட இந்தியா எந்த அளவுக்கு காற்று மாசினால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதும் கண்கூடாகத் தெரிகிறது. வட இந்தியாவை ஒரு சாம்பல் நிற புகை மண்டலம் சூழ்ந்திருப்பது விண்வெளியிலிருந்து தெரிகிறது என்று ரெட்டிட் தனது வரைபடத்துடன் வெளியிட்டிருக்கிறது.

இந்த வரைபடத்தைப் பார்த்து வெளி மாநில மக்களை விடவும், தில்லி மக்கள் அதிகக் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். இந்த காற்று மாசு எனப்படும் பேரிடர் மெல்ல எங்களது உயிர்களைக் குடித்துக்கொண்டிருக்கிறது என்றும், மிகக் கடினமான நேரம் இது, பலருக்கும் இப்போதே நுரையீரல் பிரச்னைகள் ஆரம்பித்துவிட்டன என்று ஒருவரும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.