சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ராணி லட்சுமிபாயின் துணிச்சல், தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கிறது: பிரதமர்

தைரியம் மற்றும் தேசபக்தியின் உண்மையான உருவகமாக விளங்கியவர்..

News image
ராணி லட்சுமிபாய்
Updated On :19 நவம்பர் 2024, 6:14 am

DIN

ராணி லட்சுமிபாயின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகப் போராடி, விடுதலைப் போராட்ட வீரர்களின் மத்தியில் சிறந்த வீராங்கனையாகவும், தைரியத்தின் மறுவடிவமாகவும் திகழ்ந்தவர் ராணி லட்சுமிபாய்.

1857ஆம் ஆண்டு இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடிகளில் ஒருவராவர்.

ஆங்கிலேயர்களின் நவீன போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல் 1858ல் ஜான்சி ராணி போர்க்களத்திலேயே இறந்தார்.

தைரியம் மற்றும் தேசபக்தியின் உண்மையான உருவகமான ஜான்சியின் அச்சமற்ற ராணி லட்சுமி பாய்க்கு எனது அஞ்சலிகள்.

சுதந்திரப் போராட்டத்தில் அவரது துணிச்சலும் முயற்சிகளும் தலைமுறையினருக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.