தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மகாராஷ்டிரம்: வாக்குச்சாவடி மையத்தில் மாரடைப்பால் வேட்பாளர் பலி!

வாக்குச் சாவடியில் மாரடைப்பு ஏற்பட்டு பீட் தொகுதி சுயேட்சை வேட்பாளர் பாலாசாகேப் ஷிண்டே உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :20 நவம்பர் 2024, 1:33 pm

DIN

மகாராஷ்டிரத்தில் பீட் தொகுதி சுயேட்சை வேட்பாளர் பாலாசாகேப் ஷிண்டேவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று (நவ. 20) நடைபெற்ற நிலையில், பீட் தொகுதியில் உள்ள சத்ரபதி ஷாஹு வித்யாலயா வாக்குச் சாவடியில் வாக்களிக்கச் சென்ற பீட் தொகுதியின் சுயேட்சை வேட்பாளர் பாலாசாகேப் ஷிண்டேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, அவர் சத்ரபதி ஷம்பாஜி நகர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அவரது உடலை உடற்கூறாய்வுக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் படி, தேர்தலின்போது ஒரு வேட்பாளர் இறந்தால், சம்பந்தப்பட்ட தொகுதியில் வாக்களிப்பதை பிரிவு 52-ன் கீழ் ஒத்திவைக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.