தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

மகாராஷ்டிரத்தில் ஆட்சி மாறுமா? கருத்துக் கணிப்பு முடிவுகள்!

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிறகான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :20 நவம்பர் 2024, 6:51 pm IST

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு இன்று (நவ. 20) வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். 288 தொகுதிகளிலும் 4,136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், சிவசேனை 81 இடங்களிலும், அஜீத் பவார் தலைமையிலான என்சிபி 59 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

எதிர்க்கட்சிகளின் மகாவிகாஸ் அகாடி கூட்டணியில், காங்கிரஸ் 101 வேட்பாளர்களையும், சிவசேனை (உத்தவ்) 95 வேட்பாளர்களையும், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) 86 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளன.

இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

பீப்பள்ஸ் பல்ஸ் (Peoples Pulse) நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி,

  • மகாயுதி கூட்டணி 175 - 195

  • மகாவிகாஸ் அகாடி கூட்டணி 85 - 112

மாட்ரிஸ் (Matrize) நிறுவன கருத்துக் கணிப்பு முடிவுகள்

  • மகாயுதி கூட்டணி 150 - 170

  • மகாவிகாஸ் அகாடி கூட்டணி 110 - 130

மார்க் (marq) நிறுவன கருத்துக் கணிப்பு

  • மகாயுதி கூட்டணி 137 - 157

  • மகாவிகாஸ் அகாடி கூட்டணி 126 - 146

சி.என்.என். கருத்துக் கணிப்பு

  • மகாயுதி கூட்டணி 154+

  • மகாவிகாஸ் அகாடி கூட்டணி 128+

நியூஸ் 24 - சாணக்யா கருத்துக் கணிப்பு

  • மகாயுதி கூட்டணி 152 - 160

  • மகாவிகாஸ் அகாடி கூட்டணி 130 -138

288 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 145 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

தற்போது கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் எனத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.