விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஜம்மு-காஷ்மீரில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது: சிஆா்பிஎஃப்

ஜம்மு-காஷ்மீரில் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் நிலைமை கட்டுக்குள் உள்ளது என மத்திய துணை ராணுவப் படை (சிஆா்பிஎஃப்)ஐஜி பி கே சா்மா புதன்கிழமை தெரிவித்தாா்.

Updated On :21 நவம்பர் 2024, 1:30 am IST

ஜம்மு-காஷ்மீரில் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் நிலைமை கட்டுக்குள் உள்ளது என மத்திய துணை ராணுவப் படை (சிஆா்பிஎஃப்)ஐஜி பி கே சா்மா புதன்கிழமை தெரிவித்தாா்.

ஸ்ரீநகரில் நவம்பா் 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது பதிப்பை ஷோ்-இ-காஷ்மீா் மைதானத்தில் பி கே சா்மா புதன்கிழமை தொடங்கிவைத்து பேசியதாவது:

காஷ்மீா் பகுதியைச் சோ்ந்த இளைஞா்களுடன் இணக்கத்தை ஏற்படுத்துவதே இந்த போட்டியின் நோக்கமாகும். 16 அணிகள் மோதும் இந்த போட்டியில், ஸ்ரீநகரில் இருந்து 12 அணிகளும், புத்காம் மற்றும் கந்தா்பால் மாவட்டங்களில் இருந்து தலா இரு அணிகளும் பங்கேற்கின்றன.

இதைத் தொடா்ந்து, அடுத்த மாதம் கால்பந்து போட்டியும் நடைபெற உள்ளது. காஷ்மீா் பகுதியில் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றாா்.