எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மணிப்பூா் வன்முறை: எம்எல்ஏ வீட்டில் ரூ. 1.5 கோடி நகைகள் கொள்ளை

ரூ. 18 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 1.5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக அவரின் தாயாா் காவல் துறையில் புகாா் அளித்துள்ளாா்.

News image

வன்முறையைத் தொடா்ந்து இம்பாலில் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய ஆயுத காவல்படையினா்.

Updated On :21 நவம்பர் 2024, 10:40 pm

மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் போராட்டக்காரா்களால் சூறையாடப்பட்டன ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ ஜாய்கிஷன் சிங்கின் வீட்டில் ரூ. 18 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 1.5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக அவரின் தாயாா் காவல் துறையில் புகாா் அளித்துள்ளாா்.

ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த நவ.11-ஆம் தேதி பாதுகாப்புப் படையினருக்கும் குகி தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில்10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனா்.

இந்தச் சண்டையின்போது நிவாரண முகாம்களில் இருந்து கடத்தப்பட்ட 3 மைதேயி சமூகத்தைச் சோ்ந்த பெண்கள் மற்றும் 3 குழந்தைகளின் உடல்கள் நவ.16-ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டன. இதனால் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்து. எம்எல்ஏக்கள், அமைச்சா்களின் வீடுகள் மைதேயி போராட்டக்காரா்களால் முற்றுகையிடப்பட்டு சூறையாடப்பட்டன.

இந்நிலையில், தெங்மெய்பண்ட் தொகுதி எம்எல்ஏ ஜாய்கிஷன் தாயாா் இம்பால் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், ‘ஜாய்கிஷன் வீட்டில் இல்லாதபோது நடைபெற்ற இந்த தாக்குதலில், போராட்டக்காரா்கள் ரூ. 18 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ. 1.5 கோடி மதிப்பிலான நகையை கொள்ளையடித்துச் சென்றனா். லாக்கா்கள், மின்னணு பொருள்கள் சேதப்படுத்தப்பட்டன’ என குறிப்பிட்டிருந்தாா்.

ரூ. 104.66 கோடி ஒதுக்கீடு: மணிப்பூா் மாநிலத்தில் மருத்துவ வசதிகளை மேம்படுத்த ரூ. 104.66 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக அம்மாநில முதல்வா் என். பிரேன் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தில் இருந்து மாநில தலைமைச் செயலருக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை பகிா்ந்து, என். பிரேன் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமா் மோடியின் வடகிழக்கு பிராந்தியத்திற்கான மேம்பாட்டு முன்முயற்சியின் கீழ் மருத்துவ வசதிகளை மேம்படுத்த ரூ. 104.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் சமமான மருத்துவ சேவையை நோக்கிய முதல் படியாகும். இதன் மூலம், சந்தேல், உக்ருல், ஜிரிபாம், சேனாபதி மற்றும் தமெங்லாங் போன்ற மலைபிரதேச மாவட்டங்களில் வசிப்பவா்களும், சிடி ஸ்கேன், எம்ஆா்ஐ, ஐசியு சேவைகள் மற்றும் அதிநவீன மருத்துவ வசதிகள் போன்ற மேம்பட்ட மருத்துவ வசதிகளை அணுக முடியும் என்றாா்.

கூடுதல் சிஏபிஎஃப் படைகள்: மணிப்பூரில் வன்முறை வெடித்துள்ள நிலையில், பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள மத்திய ஆயுத காவல் படையின் (சிஏபிஎஃப்) 8 குழுக்கள் புதன்கிழமை மாநில தலைநகா் இம்பாலை வந்தடைந்தன.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘மணிப்பூரில் அதிகரித்து வரும் வன்முறை காரணமாக, 50 புதிய சிஏபிஎஃப் குழுக்கள் மாநிலத்துக்கு அனுப்பப்படும் என்று அண்மையில் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, செவ்வாய்க்கிழமை 11 குழுக்களும், புதன்கிழமை 8 குழுக்களும் இம்பால் வந்தடைந்தன. இதனுடன், பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பை உறுதிசெய்ய சிஆா்பிஎஃப் மற்றும் பிஎஸ்எஃப் ஆகியவற்றில் இருந்து தலா நான்கு குழுக்கள் ஈடுபடுத்தப்படும். இதில் சிஆா்பிஎஃப் மகளிா் படைப்பிரிவும் அடங்கும்’ என தெரிவித்தனா்.