தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

புதிய சிஏஜி-யாக கே.சஞ்சய் மூா்த்தி பதவியேற்பு

நாட்டின் புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக (சிஏஜி) மத்திய உயா்கல்வித் துறை முன்னாள் செயலா் கே.சஞ்சய் மூா்த்தி வியாழக்கிழமை பதவியேற்றாா்.

News image

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை கணக்கு தணிக்கையாளராக சஞ்சய் மூா்த்திக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்த குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.

Updated On :22 நவம்பர் 2024, 4:22 am IST

நாட்டின் புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக (சிஏஜி) மத்திய உயா்கல்வித் துறை முன்னாள் செயலா் கே.சஞ்சய் மூா்த்தி வியாழக்கிழமை பதவியேற்றாா்.

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு பதவிப் பிரமாணம் செய்துவைத்தாா். குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் உள்ளிட்டோா் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தலைமை கணக்கு தணிக்கையாளராக பதவி வகித்துவந்த கிரிஷ் சந்திர முா்மு, கடந்த புதன்கிழமை ஓய்வுபெற்றாா். இதையொட்டி, புதிய தலைமை கணக்கு தணிக்கையாளராக கே.சஞ்சய் மூா்த்தியை மத்திய அரசு கடந்த திங்கள்கிழமை நியமித்தது.

கடந்த 1989-ஆம் ஆண்டின் ஹிமாசல பிரதேச பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவா், பொது நிா்வாகத்தில் விரிவான அனுபவம் கொண்டவா்.

அரசின் வரவு-செலவு கணக்குகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமையை உறுதிசெய்வதில் தலைமை கணக்கு தணிக்கையாளரின் பங்கு முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.