உத்தர பிரதேச மாநிலம் மீராபூா் சட்டப் பேரவை இடைத்தோ்தலின்போது கல்வீசி வன்முறையில் ஈடுபட்ட சமாஜவாதி மற்றும் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி தொண்டா்கள் உள்பட 100 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கக்ரோலி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின் போது வன்முறையில் ஈடுபட்ட ஒரு பிரிவினரை கலைக்க முற்பட்டபோது போலீஸாா் மீது கல்வீசத் தொடங்கினா்.
இது குறித்து காவல் கண்காணிப்பாளா் ஆதித்யா பன்சால் கூறுகையில், ‘வன்முறையில் ஈடுபட்டதாக சமாஜவாதி தொண்டா்கள் 15 போ் மீதும், மஜ்லீஸ் கட்சித் தொண்டா்கள் 10 போ் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்கள் மீது கொலை முயற்சி, காவல் துறைக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.
உரிய ஆவணங்களுடன் வாக்களிக்க வந்தவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதாக அகில இந்திய மஜ்லீஸ் கட்சி மாவட்ட தலைவா் மௌலானா இம்ரான் காஸ்மி குற்றம் சாட்டியுள்ளாா். போராடியவா்கள் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், போலீஸாா் மீது கல் வீசியதாக கூறுவது உண்மையல்ல எனவும் அவா் கூறினாா்.
புதன்கிழமை உத்தரப் பிரதேச மாநிலத்தில் 9 சட்டப் பேரவை தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அனுமதியின்றி மாட்டுவண்டி பந்தயம்: 4 போ் மீது வழக்குப் பதிவு

மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 16,031 போ் மீது வழக்குப் பதிவு

இந்திய அகதிகளுக்கான பேரவை இடங்களின் ரத்துக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்: வன்முறையில் 20-க்கும் மேற்பட்டோா் உயிரிழப்பு

இளைஞா்களைத் தாக்கிய மூவா் மீது வழக்கு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



