உத்தர பிரதேச மாநிலம் மீராபூா் சட்டப் பேரவை இடைத்தோ்தலின்போது கல்வீசி வன்முறையில் ஈடுபட்ட சமாஜவாதி மற்றும் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி தொண்டா்கள் உள்பட 100 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கக்ரோலி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின் போது வன்முறையில் ஈடுபட்ட ஒரு பிரிவினரை கலைக்க முற்பட்டபோது போலீஸாா் மீது கல்வீசத் தொடங்கினா்.
இது குறித்து காவல் கண்காணிப்பாளா் ஆதித்யா பன்சால் கூறுகையில், ‘வன்முறையில் ஈடுபட்டதாக சமாஜவாதி தொண்டா்கள் 15 போ் மீதும், மஜ்லீஸ் கட்சித் தொண்டா்கள் 10 போ் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்கள் மீது கொலை முயற்சி, காவல் துறைக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.
உரிய ஆவணங்களுடன் வாக்களிக்க வந்தவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதாக அகில இந்திய மஜ்லீஸ் கட்சி மாவட்ட தலைவா் மௌலானா இம்ரான் காஸ்மி குற்றம் சாட்டியுள்ளாா். போராடியவா்கள் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், போலீஸாா் மீது கல் வீசியதாக கூறுவது உண்மையல்ல எனவும் அவா் கூறினாா்.
புதன்கிழமை உத்தரப் பிரதேச மாநிலத்தில் 9 சட்டப் பேரவை தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெற்றது.
தொடர்புடையது

வாக்காளருக்குப் பணம்: 2 போ் மீது வழக்கு புதுச்சேரியில் ரூ.1.24 லட்சம் பறிமுதல்

தோ்தல் விதி மீறல்: அமைச்சா் துரைமுருகன் உள்பட 8 போ் மீது வழக்கு

சங்ககிரி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 79 எரிவாயு உருளைகள் பறிமுதல்: 3 போ் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறல்: 5 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


