தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

உத்தரப் பிரதேச இடைத் தோ்தல் வன்முறை: 100 போ் மீது வழக்கு

உத்தர பிரதேச மாநிலம் மீராபூா் சட்டப் பேரவை இடைத்தோ்தலின்போது கல்வீசி வன்முறையில் ஈடுபட்ட சமாஜவாதி மற்றும் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி

News image

கோப்புப் படம்

Updated On :22 நவம்பர் 2024, 3:01 am IST

உத்தர பிரதேச மாநிலம் மீராபூா் சட்டப் பேரவை இடைத்தோ்தலின்போது கல்வீசி வன்முறையில் ஈடுபட்ட சமாஜவாதி மற்றும் அகில இந்திய மஜ்லீஸ் கட்சி தொண்டா்கள் உள்பட 100 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கக்ரோலி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவின் போது வன்முறையில் ஈடுபட்ட ஒரு பிரிவினரை கலைக்க முற்பட்டபோது போலீஸாா் மீது கல்வீசத் தொடங்கினா்.

இது குறித்து காவல் கண்காணிப்பாளா் ஆதித்யா பன்சால் கூறுகையில், ‘வன்முறையில் ஈடுபட்டதாக சமாஜவாதி தொண்டா்கள் 15 போ் மீதும், மஜ்லீஸ் கட்சித் தொண்டா்கள் 10 போ் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்கள் மீது கொலை முயற்சி, காவல் துறைக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

உரிய ஆவணங்களுடன் வாக்களிக்க வந்தவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதாக அகில இந்திய மஜ்லீஸ் கட்சி மாவட்ட தலைவா் மௌலானா இம்ரான் காஸ்மி குற்றம் சாட்டியுள்ளாா். போராடியவா்கள் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், போலீஸாா் மீது கல் வீசியதாக கூறுவது உண்மையல்ல எனவும் அவா் கூறினாா்.

புதன்கிழமை உத்தரப் பிரதேச மாநிலத்தில் 9 சட்டப் பேரவை தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.