இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

தனியார் நிறுவனங்களை வீழ்த்தி புதிய வாடிக்கையாளர்களைப் பெற்ற பிஎஸ்என்எல்

தனியார் நிறுவனங்களை வீழ்த்தி 8 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்ற பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல்

Published On :

புது தில்லி: தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டணங்களை உயர்த்தியபோது, அரசுப் பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல், கட்டணக் குறைப்பை அறிவித்து, கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் புதிதாக 8 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து மூன்றாவது மாதமாக புதிதாக வாடிக்கையாளர்களைப் பெற்று வருகிறது. இதன் மூலம் இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 9 கோடியே 18 லட்சமாக உயர்ந்துள்ளது. பங்குச் சந்தையிலும் இதன் மதிப்பு 7.98 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 25 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்த பிஎஸ்என்எல் நிறுவனம், ஜூலை மாதத்தில் 29 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்தது.

அதேவேளையில், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடவோன் ஐடியா நிறுவனங்கள், கடந்த ஜூன் மாதம் கட்டண உயர்வை அறிவித்ததிலிருந்து வாடிக்கையாளர்களை இழந்துகொண்டிருக்கிறது. இந்த மூன்று நிறுவனங்களும் கடந்த ஜூன் மாதம் கட்டண உயர்வை அறிவித்தன. ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வந்த கட்டண உயர்வானது 25 சதவீத அளவுக்கு இருந்தது, சாதாரண மக்களை மிகவும் பாதித்திருந்தது.

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய தரவுகளின்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் அனைத்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களிலும் சேர்த்து ஒரு கோடி வாடிக்கையாளர்கள் வெளியேறியிருக்கிறார்கள். இதில் ஜியோ வாடிக்கையாளர்கள் மட்டும் 79 லட்சம் பேர். ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 14 லட்சம் பேர், வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் 15 லட்சம் பேர்.

அதுபோல, ஜியோ கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 40 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களும் வெளியேறியிருக்கிறார்கள்.

அதே நேரத்தில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கும், எண்ணை மாற்றாமல், தொலைத் தொடர்பு நிறுவனத்தை மட்டும் மாற்றுவதற்கான கோரிக்கைகள் லட்சக்கணக்கில் குவிந்துள்ளது.

அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திலிருந்துதான் விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதற்கடுத்த இடத்தில மகாராஷ்டிரமும் மத்தியப்பிரதேசமும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.