டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அசாம் சாலை விபத்தில் 8 பேர் பலி, 3 பேர் காயம்

அசாமின் பஜாலி மற்றும் துப்ரி மாவட்டங்களில் சனிக்கிழமை நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் 8 பேர் பலியாகினர் மற்றும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

News image
அசாம் சாலை விபத்தில் 8 பேர் பலி, 3 பேர் காயம்
Updated On :23 நவம்பர் 2024, 7:30 am

DIN

கவுகாத்தி: அசாமின் பஜாலி மற்றும் துப்ரி மாவட்டங்களில் சனிக்கிழமை நடந்த இருவேறு சாலை விபத்துகளில் 8 பேர் பலியாகினர் மற்றும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் காயமடைந்த இருவரும் ஃபக்ருதீன் அலி அகமது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தனர்.

பஜாலி மாவட்டத்தில் துக்க நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றுவிட்டு வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பபானிபூர் அருகே லாரி மீது வேன்

மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணித்தவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் மற்றும் 2 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த இருவரும் ஃபக்ருதீன் அலி அகமது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பலியானவர்கள் ஆஷிஷ் ஹபீப் கான், மிசானூர் ரஹ்மான், ராயல் கான், மிசானூர் கான் மற்றும் மொய்னுல் ஹக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் அமீர் கான் மற்றும் காசி சக்ரா அகமது என்று போலீசார் தெரிவித்தனர்.

மற்றொரு விபத்தில் 3 பேர் பலி

மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹாரில் நடைபெற்றும் வரும் 'ராஸ்' கண்காட்சியை பார்ப்பதற்காக கௌரிபூரில் இருந்து வேனில் சென்று கொண்டிருந்தபோது துப்ரி மாவட்டம் அகோமோனி பகுதியில் உள்ள கரேஹாட் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது பயணிகள் வேன் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், ஒருவர் படுகாயமடைந்தார்.

பலியானவர்கள் தஞ்சய் ராய், பிகாஸ் கலிதா மற்றும் ராம் ராய் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், காயமடைந்த கானிந்திரா ராய் தற்போது துப்ரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என போலீசார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.