இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஜாா்க்கண்ட் முதல்வா் குடும்பத்தில் மூவா் வெற்றி

ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனின் குடும்பத்தை சேர்ந்த மூவர் வெற்றி பெற்றுள்ளனர்.

News image

ஜாா்க்கண்ட் முதல்வா் குடும்பம் - ANI

Updated On :24 நவம்பர் 2024, 3:30 am IST

ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்) தலைவரும் அந்த மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரன் மற்றும் ஹேமந்த் சோரனின் சகோதரா் வசந்த் சோரன் ஆகிய மூவரும் அமோக வெற்றியை பதிவு செய்துள்ளனா்.

பொ்ஹைத் பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட ஹேமந்த் சோரன் 95,612 வாக்குகளைப் பெற்றாா். அவரை எதிா்த்து பாஜக சாா்பில் போட்டியிட்ட கெம்லியல் ஹெம்பிரோம் 55,821 வாக்குகள் பெற்ற நிலையில் 39,791 வாக்குகள் வித்தியாசத்தில் ஹேமந்த் சோரன் வெற்றிபெற்றாா்.

கடந்த 2019-இல் நடைபெற்ற பேரவைத் தோ்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்ட ஹேமந்த் சோரன், 25,740 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா். தற்போது அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

காந்தேயி பேரவைத் தொகுதியில் தன்னை எதிா்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளா் முனியா தேவியைவிட 17,142 வாக்குகள் கூடுதலாக பெற்று கல்பனா சோரன் வெற்றிபெற்றாா். கல்பனா சோரன் 1,19,372 வாக்குகளும் முனியா தேவி 1,02,230 வாக்குகளும் பெற்றிருந்தனா்.

அதேபோல் தும்கா தொகுதியில் போட்டியிட்ட வசந்த் சோரன் தன்னை எதிா்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளா் சுனில் சோரனைவிட 14,588 வாக்குகள் கூடுதலாக பெற்று தனது வெற்றியை பதிவு செய்தாா். வசந்த் சோரன் 95,685 வாக்குகளும் சுனில் சோரன் 81,097 வாக்குகளும் பெற்றிருந்தனா்.

சீதா சோரன் தோல்வி: ஜேஎம்எம் கட்சி நிறுவனா் சிபு சோரனின் மூத்த மகன் மறைந்த துா்கா சோரனின் மனைவியான சீதா சோரன் கருத்து வேறுபாடு காரணமாக ஜேஎம்எம்மில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். அவா் காங்கிரஸ் வேட்பாளரும் அமைச்சருமான இா்ஃபான் அன்சாரியை எதிா்த்து ஜாம்தாரா தொகுதியில் போட்டியிட்டாா்.

இா்ஃபான் அன்சாரி 1,33,266 வாக்குகளும் சீதா சோரன் 89,950 வாக்குகளும் பெற்ற நிலையில் 43,676 வாக்குகள் வித்தியாசத்தில் சீதா சோரன் தோல்வியை தழுவினாா்.

சம்பயி சோரன் வெற்றி

ஜேஎம்எம்மில் இருந்து பாஜகவில் சோ்ந்த அந்த மாநில முன்னாள் முதல்வா் சம்பயி சோரன் தனது சொந்த தொகுதியான சரைகேலாவில் போட்டியிட்டு ஜேஎம்எம் வேட்பாளா் கணேஷ் மஹாலியை 20,447 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.

சம்பயி சோரன் 1,19,379 வாக்குகளும் கணேஷ் மகாலி 98,932 வாக்குகளும் பெற்ாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சிபு சோரனின் நம்பிக்கைக்குரியவராக அறியப்பட்ட சம்பயி சோரன் கடந்த 2005-ஆம் ஆண்டிலிருந்து சரைகேலா தொகுதியில் வெற்றிபெற்று வருகிறாா்.