கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் நிலையில் பிரியங்கா காந்தி என்ன செய்கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
வயநாடு மக்களவைத் தொகுதியில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி தனது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.
இந்த நிலையில், அவரது கணவர் ராபர்ட் வதேரா செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். அப்போது அவர் கூறுகையில், காங்கிரஸ் தலைவர் பிரியங்காவின் கடின உழைப்பை மதித்து வயநாடு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
வயநாடு மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மக்களவையில், மக்களின் குரலாக பிரியங்கா இருக்க வேண்டும் என்று எப்போதும் நான் விரும்பியிருக்கிறேன். அவர் வெற்றி வித்தியாசத்தில் சாதனை படைப்பார் என்றே எதிர்பார்க்கிறேன் என்றார்.
இதையும் படிக்க.. மகாராஷ்டிரத்தில் மகாயுதி வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது பெண்களா?
மேலும், வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் நிலையில், பிரியங்கா என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று கேட்டதற்கு, அவர் வீட்டில் குழந்தைகளுடன் நேரம் செலவழித்தார், வழக்கம் போல புத்தகம் படித்தார். தேர்தல் முடிவை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இதற்காக அவர் கடினமாக உழைத்துள்ளார். மக்களுக்காகவும் கடினமாக உழைப்பார் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவில் சோனி பிஎஸ்5 ப்ரோ விலை என்ன? மகிழ்ச்சி தகவல்

நோய்நாடி நோய்முதல் நாடி...

நோட்டா (NOTA), 49-O வாக்கு என்றால் என்ன?

வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா்களை மீட்க என்ன திட்டம் உள்ளது? பிரதமா் மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வி
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


