விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவுதவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்- நாளை வேளாண் பட்ஜெட் 2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு புதுச்சேரியில் 2 ரயில்கள் சேவை 7 நாள்களுக்கு ரத்து
/

5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து.... ரூ. 26 லட்சம் இழப்பீடு பெற்ற நபர்!

விபத்தில் பாதிக்கப்பட்ட நபருக்கு 5 ஆண்டுகள் கழித்து இழப்பீடு வழங்கப்பட்டது.

News image
Updated On :24 நவம்பர் 2024, 3:23 pm IST

மும்பை அருகேயுள்ள தானே நகரில் கடந்த 2019 ஆண்டு விபத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கு தற்போது ரூ. 26 லட்சம் இழப்பீடு பெற்றுத் தரப்பட்டுள்ளது.

மும்பை லால்பகதூர் சாலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மே 25 அன்று தனது இருசக்கர வாகனத்தின் அருகே நின்று கொண்டிருந்த அப்துல்லா முகமது ஹதீஸ் கான் (38) என்பவரை அந்த வழியே வந்த டேங்கர் லாரி மோதியது.

இதில், அப்துல்லா பலத்த காயமடைந்தார். அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், விபத்து நடந்து 5 ஆண்டுகள் கழித்து தானே நகரில் உள்ள மோட்டார் வாகன விபத்துக்கான உரிமைகோரல் தீர்ப்பாயத்தின் கீழ் அவருக்கு இழப்பீடாக ரூ. 26.38 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இதில், ரூ. 24,4 லட்சம் அவரது வருவாய் இழப்புக்கான இழப்பீடாகவும், ரூ. 47,729 மருத்துவ உதவிக்காகவும், ரூ. 50,000 காயங்கள் மற்றும் உணவுக்காகவும், மேலும் ரூ. 50,000 அவரது வாழ்க்கை விருப்பங்களை இழந்ததற்காக வழங்கப்படுவதாக அந்தத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

விபத்து நடந்தபோது அப்துல்லாவின் ஆண்டு வருமானம் ரூ. 8.42 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.