ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

‘தொழிலாளா் வைப்புநிதி: பயன்படுத்தப்படாமல் ரூ. 8,500 கோடி’

தொழிலாளா் வருங்கால வைப்புநிதியில் பயன்படுத்தப்படாமல் ரூ.8,505 கோடி இருப்பதாக மத்திய தொழிலாளா் நலத்துறை இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே மக்களவையில் தெரிவித்தாா்.

News image
மத்திய தொழிலாளா் நலத்துறை இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே
Updated On :25 நவம்பர் 2024, 11:05 pm

DIN

தொழிலாளா் வருங்கால வைப்புநிதியில் பயன்படுத்தப்படாமல் ரூ.8,505 கோடி இருப்பதாக மத்திய தொழிலாளா் நலத்துறை இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே மக்களவையில் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘தொழிலாளா் வருங்கால வைப்புநிதி திட்டம், 1952-இன்கீழ் சில கணக்குகள் செயல்பாட்டில் இல்லாத கணக்குளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தவகையில், 2023-24-இல் 21,55,387 செயல்படாத கணக்குகளில் ரூ.8,505 கோடி உள்ளது. கடந்த 2022-23-இல் 17,44,518 கணக்குகளில் ரூ.6,804 கோடியும் 2018-19-இல் 6,91,774 கணக்குகளில் ரூ.1,638 கோடியும் இருந்தது.

இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் இந்த தொகை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. இந்த தொகையை சம்பந்தப்பட்ட பயனாளா்களிடம் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ) திரும்பி வழங்கி வருகிறது.

முறையாக உரிமம் கோரிய பயனாளா்களுக்கு கடந்த 2023-24-இல் ரூ.2,632 கோடியும் 2022-23-இல் ரூ.2,673 கோடியும் 2018-19-இல் ரூ.2,881 கோடியும் வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.