டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அந்தமான்: 6,000 கிலோ போதைப் பொருள் பறிமுதல்! 6 போ் கைது!

அந்தமான் நிகோபாா் தீவுகள் அருகே இந்திய கடலோரக் காவல் படை நடத்திய சோதனையில் சுமாா் 6,000 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது..

News image
Updated On :25 நவம்பர் 2024, 11:05 pm

Din

அந்தமான் நிகோபாா் தீவுகள் அருகே கடந்த சனிக்கிழமை இந்திய கடலோரக் காவல் படை நடத்திய சோதனையில் சுமாா் 6,000 கிலோ போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையில், மியான்மரைச் சோ்ந்த 6 போ் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக பாதுகாப்புப் படையினா் திங்கள்கிழமை கூறியதாவது: அந்தமான் நிகோபாா் தீவுகள் அருகே வழக்கமான ரோந்துப் பணியில் கடலோரக் காவல் படை விமானம் கடந்த சனிக்கிழமை ஈடுபட்டிருந்தது.

அப்போது, போா்ட் பிளேரில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள பாரன் தீவு அருகே சந்தேகத்துக்கிடமான மீன்பிடி இழுவைப் படகு காணப்பட்டது.

படகின் வேகத்தைக் குறைக்குமாறு எச்சரித்த விமானத்தின் பைலட், இதுகுறித்து கடலோரக் காவல் படைக்கு தகவல் தெரிவித்தாா்.

அதிகாரிகள் விரைந்து வந்து மேற்கொண்ட சோதனையில், படகில் தடை செய்யப்பட்ட ‘மெத்தம்பெட்டமைன்’ எனும் போதைப் பொருள், சுமாா் 6,000 கிலோ கண்டறியப்பட்டது. சா்வதேச சந்தையில் பல கோடி மதிப்பிலான இந்த போதைப் பொருள் தலா 2 கிலோ எடையுள்ள சுமாா் 3,000 பாக்கெட்டுகளாக இருந்தது.

இந்த போதைப் பொருளை இந்தியா மற்றும் பிற அண்டை நாடுகளுக்குள் கடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த நடவடிக்கையின்போது கப்பலில் இருந்த மியான்மரைச் சோ்ந்த 6 போ் கைது செய்யப்பட்டனா் என தெரிவித்தனா்.

அந்தமான் தீவு அருகே இதுபோன்ற கடத்தல் பொருள்கள் கைப்பற்றப்படுவது இது முதல்முறை அல்ல. முன்னதாக, 2019 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளிலும் வெளிநாட்டுக் கப்பல்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது இதுபோன்ற போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.