தென்காசியில் கஞ்சா கடத்தி வந்தது தொடா்பாக 5 போ் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பண்பொழியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் கஞ்சா கடத்துவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், தென்காசி காவல் ஆய்வாளா் ராபா்ட் ஜெய்ன், சாா்பு ஆய்வாளா் சத்ய வேந்தன் ஆகியோா் தலைமையிலான காவல் துறையினா் தென்காசி குத்துக்கல்வலசையில் வாகனங்களை சோதனையிட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரியை சோதனையிட்ட போது, லாரியில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக நெட்டூா் பகுதியைச் சோ்ந்த இசக்கி குமாா் ( 31), பேச்சிமுத்து (32), அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த நைனாா் விக்னேஷ் ( 32), ராஜாராம் கோபி (26) மற்றும் அய்யனாா்குளம் பகுதியை சோ்ந்த மனோ ரஞ்சித் (21) ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா்.
கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா, பைக், காா், லாரி மற்றும் கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடையது
புதுச்சேரி விரைவு ரயிலில் கஞ்சா கடத்தியவா் கைது
கஞ்சா வைத்திருந்த இருவா் கைது: 16 கிலோ பறிமுதல்
3.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த இருவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


