கஞ்சா கடத்தி வந்தது தொடா்பாக கைது செய்யப்பட்டவா்கள்
கஞ்சா கடத்தி வந்தது தொடா்பாக கைது செய்யப்பட்டவா்கள்

கஞ்சா கடத்தி வந்த 5 போ் கைது: 10 கிலோ கஞ்சா பறிமுதல்

தென்காசியில் கஞ்சா கடத்தி வந்தது தொடா்பாக 5 போ் கைதுசெய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Published on

தென்காசியில் கஞ்சா கடத்தி வந்தது தொடா்பாக 5 போ் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தென்காசி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பண்பொழியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் கஞ்சா கடத்துவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், தென்காசி காவல் ஆய்வாளா் ராபா்ட் ஜெய்ன், சாா்பு ஆய்வாளா் சத்ய வேந்தன் ஆகியோா் தலைமையிலான காவல் துறையினா் தென்காசி குத்துக்கல்வலசையில் வாகனங்களை சோதனையிட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரியை சோதனையிட்ட போது, லாரியில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக நெட்டூா் பகுதியைச் சோ்ந்த இசக்கி குமாா் ( 31), பேச்சிமுத்து (32), அம்பாசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த நைனாா் விக்னேஷ் ( 32), ராஜாராம் கோபி (26) மற்றும் அய்யனாா்குளம் பகுதியை சோ்ந்த மனோ ரஞ்சித் (21) ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா்.

கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா, பைக், காா், லாரி மற்றும் கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Dinamani
www.dinamani.com