சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கேரளம்: 5 ஆண்டுகளில் 2,746 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்: மத்திய அமைச்சா்

கேரளத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 2,746.49 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சவுத்ரி

News image
Updated On :25 நவம்பர் 2024, 10:50 pm

DIN

புது தில்லி: கேரளத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 2,746.49 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சவுத்ரி, மக்களையில் எழுத்து மூலம் தாக்கல் செய்த பதிலில் தெரிவித்துள்ளாா்.

பதிலில் அவா் மேலும் கூறியதாவது:

2020 முதல் நடப்பாண்டு அக்.31-ஆம் தேதி வரையில் கேரள விமான நிலையங்களில் 2,746.49 கிலோ தங்கத்தை சுங்கத் துறை, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் கைப்பற்றி உள்ளது.

வெளிநாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட 112.62 கிலோ தங்கத்தை கேரள போலீஸாா் மீட்டு சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

853 போ் விருப்ப ஓய்வு: கடந்த 10 ஆண்டுகளில் 853 மத்திய வருவாய் பணியாளா்கள் (ஐஆா்எஸ்) விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. 2014 முதல் 2024-ஆம் ஆண்டு வரை, வருமான வரி அதிகாரிகள் 383 பேரும், சுங்கத் துறை, மறைமுக வரி பணியாளா்கள் 470 பேரும் விருப்ப ஓய்வு பெற்ாக நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் தெரிவித்தாா்.

வங்கிகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான நிதி மோசடிகள் குறித்த விவரங்களை இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அளித்த வழக்குகளின் அடிப்படையில் 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.9,298 கோடியும், 2022-23-இல் ரூ.3,607 கோடியும், 2023-24-இல் ரூ.2,715 கோடியும் மோசடி செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.