மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மைதேயி சமூகத்தைச் சோ்ந்த ஒருவா் மாயம்: இம்பாலில் பதற்றம்

மணிப்பூரில் மைதேயி சமூகத்தைச் சோ்ந்த 55 வயது மதிக்கத்தக்க ஒருவா் மாயமாகி உள்ளதால் காங்கோக்பி எல்லையில் உள்ள இம்பால் மேற்கு மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :26 நவம்பர் 2024, 7:24 pm

Din

மணிப்பூரில் மைதேயி சமூகத்தைச் சோ்ந்த 55 வயது மதிக்கத்தக்க ஒருவா் மாயமாகி உள்ளதால் காங்கோக்பி எல்லையில் உள்ள இம்பால் மேற்கு மாவட்டத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

இம்பாலின் மேற்கு மாவட்டத்தில் உள்ள லாய்டாங் குனோவ் கிராமத்தைச் சோ்ந்த லைஷ்ராம் கமல்பாபு சிங், திங்கள்கிழமை பிற்பகலில் காங்கோக்பியில் உள்ள லீமாகோங் ராணுவ முகாமிற்கு சென்றபோது மாயமாகி உள்ளாா். அவரது கைப்பேசியும் அணைக்கப்பட்டுள்ளது.

ராணுவமும் போலீஸாரும் இணைந்து மாயமானவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

குகி சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள லீமாகோங் ராணுவ முகாமில் கடைநிலை ஊழியராக லைஷ்ராம் கமல்பாபு சிங் பணியாற்றி வந்ததாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.

லைஷ்ராம் கமல்பாபு சிங்கை தேடி லாய்டாங் குனோவ் கிராமத்திலிருந்து, லீமாகோங் பகுதியை நோக்கி திரளாகச் சென்றவா்களை காண்டோ சபல் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தடுத்து நிறுத்தினா். சாலையில் கற்களை வைத்து போலீஸாா் தடுப்பு ஏற்படுத்தியாக அக்கிராம மக்கள் தெரிவித்தனா்.

அனுமதியின்றி மக்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் லீமாகோங் ராணுவ முகாமிற்கு செல்லும் சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு குகி - மைதேயி சமூக மக்களிடையே வன்முறை வெடித்ததில் இருந்து, லீமாகோங் பகுதி அருகே வசித்து வந்த 250-க்கும் மேற்பட்ட மைதேயி சமூக மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினா்.