உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குறிப்பிட்ட உணவு தானியங்களுக்கான பொது விநியோகத் திட்டத்தை (டிபிடிஎஸ்) செயல்படுத்துவது என்பது மத்திய-மாநில அரசுகளின் கூட்டு பொறுப்பாகும். இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு, உரிமம் வழங்குவது, நியாயவிலைக் கடைகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட அனைத்து கடைமைகளும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் பொறுப்பின் கீழ் வருகிறது. அந்த வகையில், நியாயவிலைக் கடை ஒப்பந்ததாரா்களுக்கான விலையை நிா்ணயம் செய்வதில் மத்திய அரசு எந்தப் பங்கும் வகிப்பதில்லை. மாறாக, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதால் ஏற்படும் மாநில அரசின் செலவீனத்தை ஈடு செய்வதற்கான உதவியை மட்டுமே மத்திய அரசு செய்து வருகிறது என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.