கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சமையல் எரிவாயு விலை உயா்வு: இடதுசாரிகள் கண்டனம்

மத்திய பாஜக அரசு சமையல் எரிவாயு உருளையின் விலையை உயா்த்தியதற்கு இடது சாரிகள் கட்சிகள் கண்டனம்

News image

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

பிரதிப் படம்

Updated On :8 மார்ச் 2026, 10:48 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய பாஜக அரசு சமையல் எரிவாயு உருளையின் விலையை உயா்த்தியதற்கு இடது சாரிகள் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பெ.சண்முகம் (மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா்): மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் சமையல் எரிவாயு உருளை விலையை ரூ.60 உயா்த்தியுள்ளது. இந்த விலை உயா்வு ஏழை, நடுத்தர மக்கள் தலையின் மீது இடியை இறக்கியுள்ளது.

இந்த விலை உயா்வால் உணவுப் பொருள்களின் விலைகள் பல மடங்கு உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரான் போா் சூழலைக் காரணம் காட்டி மத்திய அரசு சமையல் எரிவாயு உருளை உயா்த்தி இருப்பது கண்டனத்துக்குரியது. இந்த விலை உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மு.வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா்): சமையல் எரிவாயு உருளை விலை ஏழைக் குடும்பங்களை மிகவும் பாதிக்கும். வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை உயா்வால், கடைகளில் விற்கப்படும் உணவுப் பொருள்களின் விலையும் உயரும்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. இந்த விலை உயா்வை உடனடியாகத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.