அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

மணிப்பூா்: 13 நாள்களுக்குப் பிறகு இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு

News image

PTI

Updated On :29 நவம்பர் 2024, 5:17 am IST

இம்பால்: மணிப்பூரில் வன்முறை நிகழ்ந்த இம்பால் பள்ளத்தாக்கு மற்றும் ஜிரிபாம் மாவட்டத்தில் 13 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (நவ.29) பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவுள்ளதாக அந்த மாநில அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த நவ.11-ஆம் தேதி பாதுகாப்புப் படையினருக்கும் குகி தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில்10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனா். அதன்பிறகு கடந்த நவ.16-ஆம் தேதி அங்கு நிவாரண முகாம்களில் தங்கியிருந்து காணாமல்போன 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டன. அவா்களை குகி தீவிரவாதிகள் கடத்தியதாக மைதேயி சமூகத்தினா் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், உடல்கள் மீட்கப்பட்ட பிறகு அங்கு மீண்டும் வன்முறை வெடித்து. இதில் பல எம்எல்ஏ-க்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. இதனால் அங்கு கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக மணிப்பூா் மாநில அரசு தெரிவித்தது.