ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பரபரப்பான அரசியல் சூழலில் சொந்த கிராமத்துக்குச் சென்ற ஷிண்டே!

பரபரப்பான அரசியல் சூழலில் சொந்த கிராமத்துக்கு வந்த ஷிண்டே!

News image
ஏக்நாத் ஷிண்டே
Updated On :29 நவம்பர் 2024, 9:44 am

DIN

மகாராஷ்டிர தேர்தல் முடிந்து ஆறு நாள்கள் ஓடிவிட்டன. இன்னமும் முதல்வர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்படாத பரபரப்பான சூழலில் தனது சொந்த கிராமத்துக்கு வந்துவிட்டார் ஏக்நாத் ஷிண்டே.

எதுவாக இருந்தாலும், டிசம்பர் 7ஆம் தேதி அல்லது அதன்பிறகுதான் மகாராஷ்டிர முதல்வர் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே மகாயுதி கூட்டணித் தலைவர்களின் அமித் ஷாவுடனான சந்திப்பு, அமைச்சரவையை உறுதி செய்வதற்கானதாகவும் பார்க்கப்படுகிறது.

முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ் தேர்வு செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஏக்நாத் ஷிண்டேவை துணை முதல்வர் பதவியேற்குமாறு அமித் ஷா தரப்பில் வலியுறுத்தியதாகவும், ஆனால், அதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறப்படுகிறது.

இத்தனை அரசியல் பரபரப்புகளுக்கு இடையே ஏக்நாத் ஷிண்டே, சிதாராவில் உள்ள தனது சொந்த கிராமத்துக்குத் திரும்பியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஆனால், அவர் மன வருத்தத்துடன் இல்லை என்றுதான் சிவசேனை தலைவர்கள் பலரும் விளக்கம் கொடுத்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.