பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

பிஆர்எஸ் கவிதா மருத்துவமனையில் அனுமதி!

பிஆர்எஸ் கவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பற்றி...

News image

கே. கவிதா

Updated On :1 அக்டோபர் 2024, 5:52 am

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், பாரதிய ராஷ்டிரிய சமிதியின் மூத்த தலைவருமான கவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று இரவுக்குள் வீடு திரும்ப வாய்ப்புள்ளதாகவும் கவிதாவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, கவிதாவுக்கு அதிக காய்ச்சல் மற்றும் மகப்பேறு பிரச்சினை ஏற்பட்டன.

இந்த பிரச்சினைகளை தொடர்ந்து, ஏற்கெனவே தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கவிதா அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார்.

5 மாதம் சிறை

தில்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக கவிதாவின் ஹைதராபாத் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்த நிலையில், மார்ச் 15-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

தில்லி திகார் சிறைக்கு மாற்றப்பட்ட கவிதாவுக்கு 5 மாதங்களுக்கு பிறகு ஆகஸ்ட் 27-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.