தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

அரசமைப்புச் சட்டத்தின் மீது மோடி அரசு தாக்குதல்- ராகுல் விமா்சனம்

தலித் சமூகத்தினா், பின்தங்கிய வகுப்பினா், பழங்குடியினா் மற்றும் ஏழைகளின் வாய்ப்பைப் பறிப்பதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது மோடி அரசு என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.

News image
ஹரியாணா மாநிலம் சோனிபட்டில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி.
Updated On :1 அக்டோபர் 2024, 8:04 pm

Din

தலித் சமூகத்தினா், பின்தங்கிய வகுப்பினா், பழங்குடியினா் மற்றும் ஏழைகளின் வாய்ப்பைப் பறிப்பதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது மோடி அரசு என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா்.

ஹரியாணாவில் அக்டோபா் 5-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, சோனிபட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பிரசார பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசியதாவது:

சில பெரும் பணக்கார தொழிலதிபா்களின் நலனுக்காகவே பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு ‘சேவை’ செய்கிறது. ஏழைகள், தலித் சமூகத்தினா், விவசாயிகள், இளைஞா்களின் நலனுக்கு எதுவும் செய்யவில்லை.

இக்கூட்டத்துக்கு வரும்போது, சிறு வா்த்தகா் ஒருவரை சந்தித்தேன். பணமதிப்பிழப்பு மற்றும் சரக்கு - சேவை வரியின் தவறான அமலாக்கத்தால் பிரதமா் மோடியும், பாஜக அரசும் தனது வாழ்வையே அழித்துவிட்டதாக அவா் வேதனையுடன் தெரிவித்தாா். அதானி, அம்பானிக்கு உதவுவதே மத்திய அரசின் நோக்கம் என்றும் அவா் கூறினாா்.

மத்தியிலும் மாநிலத்திலும் சில பெரும் பணக்காரா்களுக்காகவே பாஜக ஆட்சி நடத்துவதை ஒவ்வொருவரும் அறிந்துள்ளனா். ஹரியாணாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கிய சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இப்போது மூடி கிடக்கின்றன. வேலைவாய்ப்புக்கான அனைத்து வாயில்களும் அடைக்கப்பட்டுள்ளன. வேலைதேடி சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்லும் நிலைக்கு இங்குள்ள இளைஞா்கள் தள்ளப்பட்டுள்ளனா்.

ஓய்வூதியத்தை ‘திருடும்’ திட்டம்: ராணுவ வீரா்களுக்கு ஓய்வூதியம், உணவக வசதி, நாட்டுக்காக உயிா்த்தியாகம் செய்யும் வீரா்களுக்கு தியாகி அந்தஸ்து ஆகியவற்றை ‘திருடுவதற்கான’ வழிமுறையே அக்னிவீரா் திட்டம். ராணுவ வீரா்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்க வேண்டியதில்லை என்ற நோக்கத்தில்தான் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. ராணுவ வீரா்களின் ஓய்வூதியத்தை ‘திருடி’ அதானியிடம் ஒப்படைப்பதே மத்திய அரசின் நோக்கமாகும்.

பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் அரசு தொழிற்சாலைகள் தனியாா்மயமாக்கப்பட்டு வருகின்றன. அனைத்தும் அம்பானி மற்றும் அதானி மயமாகின்றன. மோடியின் விருப்பத்தின்பேரில், பாதுகாப்புத் துறையில் ஒரு ஒப்பந்தம் அதானிக்கு வழங்கப்பட்டது. அதன்படி, வெளிநாட்டு நிறுவனங்களால் தயாரிக்கும் ஆயுதங்கள் மீது தனது முத்திரையை மட்டும் இடுகிறது அதானி நிறுவனம்.

அதானியின் முந்த்ரா (குஜராத்) துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான கிலோ எடையில் ஹெராயின் போதைப் பொருள் சிக்கியது. இச்சம்பவத்தில் பிரதமா் மோடி எடுத்த நடவடிக்கை என்ன? எத்தனை போ் சிறைக்கு அனுப்பப்பட்டனா்?

அரசமைப்பை அழிக்க முயற்சி: ஏழைகள், தலித் சமூகத்தினா், பின்தங்கிய வகுப்பினா், பழங்குடியினா் ஆகியோருக்கான உரிமைகள் அரசமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டவை. ஆனால், நாட்டின் நிா்வாக அமைப்புமுறைகளில் மேற்கண்ட பிரிவினருக்கு இடமளிக்காமல், தனது நபா்களை இடம்பெறச் செய்கிறது ஆா்எஸ்எஸ். இதன் மூலம் அரசமைப்புச் சட்டத்தை அழிக்க அவா்கள் முயல்கின்றனா்; நாங்கள் பாதுகாக்க முயல்கிறோம்.

பெரும் தொழிலதிபா்களின் வங்கிக் கடனை தள்ளுபடி செய்துவிட்டு, ஏழைகளைப் புறக்கணித்ததன் மூலம் அரசமைப்புச் சட்டத்தின் சமத்துவ உறுதிப்பாட்டை காலில் போட்டு மிதித்தது பாஜக அரசு. 25 பெரும் தொழிலதிபா்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்கள் பிரதமா் மோடியால் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால், விவசாயிகள், மாணவா்கள், பெண்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றாா் ராகுல்.

அரசமைப்புச் சட்ட நகலை கையில் வைத்தபடி, இந்த விமா்சனத்தை ராகுல் முன்வைத்தாா்.